உ.இ.ப.மா.சங்கம் கலை விழா 2007

உரும்பிராய் இந்துக்கல்லூரி பழைய மாணவர்(உ.இ.ப.மா) சங்கம் பிரித்தானிய கிழை வருடா வருடம் ஒன்று கூடலும் கலை நிகழ்சிகளையும் நடாத்தி(இலங்கைத் தமிழில் 'நடத்தி') வருகிறது. இந்த வருடம் மார்ச் 17ஆம் தேதி இது நடந்தது. இதுவரை நான் தமிழ் கலைநிகழ்சிக்களைப் பார்த்திராததால் அம்மா சொன்னவுடனே ஓம் என்று கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். இந்நிகழ்ச்சிகள் தமிழ் குடும்பகளை ஒன்று கூட்டவும், இலங்கையில் பல நற்பணிகள் செய்ய நிதி திரட்டவும் நடத்தப்படுகிறது. எனவே, ஒரு குடும்பத்துக்கு சாப்பாடு உள்பட இருபதோ முப்பதோ பவுண்கள்தான் (என்று நினைக்கிறேன்). அங்கே சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும் மதுபானங்களும்!! (பீர் ஆனாலும் !!!) விற்கப்பட்டன. விற்பனையில் கிடைத்த இலாபம் அனைத்தும் அறக்கட்டளை நிதிக்கு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பற்றிய பதிவு இது.

சின்னத்திரை சில்லெடுப்பு

முதல் நிகழ்ச்சி ஒரு வில்லுப்பாட்டு. தமிழ் தொலைக்காட்சிகளில் அலைபரப்பப்படும் சின்னத்திரைகள் பற்றியும் அதை பார்ப்பதற்கு வீட்டில் அம்மா, அப்பா, பாட்டி என்று ஒவ்வொருவரும் அடிபடுவதைப் பற்றியும் நல்ல நகைச்சுவையோடு சொன்னார்கள். அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் சிறப்பாக பாடினார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியின் ஒலிபரப்புதலுக்கு (Sound system guysக்கு தமிழாக்கம்??) நியமிக்கப்பட்டவர்களின் சாதனங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. ஒரே இரைச்சலும் கீச்சலுமாக ஒலிபெருக்கி இரைந்து, நிகழ்சிகளில் பாதி புரியவில்லை.

வயலின் இசை

நான் சொல்வதைவிட நீங்களே கேளுங்கள். என்னுடைய படக் கருவியில் நிகழ்படங்கள் எடுக்க முடிந்தாலும் நிகழ்படம் எடுக்கும் கருவிகளின் தரத்துக்கு எடுக்க இயலாது. எனது கையும் தொடக்கத்தில் ஆடி படத்துக்கு ஆட்டம் காட்டிவிட்டது. ஆனால் போகப் போக ஆடாமல் பார்த்துக் கொண்டேன். இந்த சின்னப் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளவும்.


பாடல்: அலைபாயுதே கண்ணா


வயலின் - அமுதைப் பொழியும் நிலவே, அருகில் வராததேனோ

கௌரவ விருந்தினர் உரை

கலை நிகழ்ச்சிகளுக்கிடயே லண்டன் நியூஹாம் நகரசபை அங்கத்தவர் (councillor) திரு போல் சத்தியநேசன் அவர்கள் நடத்திய உரை மிகவும் பிடித்திருந்தது. அவர் புலம்பெயர்ந்து வாழ்வது பற்றிக் கூறும்போது எப்படி நம் பிள்ளைகளின் பிள்ளைகள் நம் வரலாற்றை மறந்துவிடக் கூடும் என்பதைக் குறிப்பிட்டார். மேலும், தமிழ் வராற்றையேல்லாம் ஒன்று சேர்த்து family tree போல் உருவாக்கினால் பிற்காலத்தில் நம் சந்ததியினருக்கு ஒரு பேர் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். அதற்கு நிதி உதவியும் அரசு ஒதுக்கியுள்ளதாகக் கூறினார். இப்படி ஒரு குடும்ப வரைபடம் செய்வது என் நீண்ட நாள் கனவு. அதற்காக என் அப்பம்மாவிடம் அவர்களுக்கு தெரிந்த மட்டும் நம் குடும்ப சரித்திரத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டேன். அதற்காக ஒரு நிரலை உருவாக்குவதாக இருந்தேன். அது பிறருக்கும் பயன்படுமெனில் அந்நிரலை உருவாக்க கூடுதல் உந்துதலாக இருக்கும்.

பரதநாட்டியம்


ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே


பரதநாட்டியம் - ஸ்ருதிலயா

கலைநிகழ்ச்சிகள் எல்லாம் நன்றாகவே இருந்தது. ஆனால், ஒலிச் சாதனங்களின் பிரச்சனை மற்றும் மக்களின் பேச்சு சத்தத்தையும் தாண்டி நிகழ்ச்சிகளை ரசிக்க முடியவில்லை. அறிவிப்பாளர்கள் மக்களுக்கு எவ்வளவோ முறை பேச்சுச் சத்ததைக் குறைக்கச் சொல்லி (நிறுத்தச் சொல்லவில்லை) வேண்டினார்கள். அந்த அறிவிப்புகள்கூட மக்களின் பேச்சுச் சத்தத்தில் மூழ்கிப் போயிற்று. இதில் நான் கற்றுக் கொண்டது, விலை கூடினாலும் கலைஞர்களின் திறமையும் உழைப்பையும் பாராட்டும் நிகழ்சிகளுக்கு செல்ல வேண்டும் (இத்தாலியன் ஓப்ரா டிச்கெட் விலை நூறு பவுண்களுக்கு மேல்; ஆங்கில மேடை நாடங்கள்: மூப்பது - அறுபது பவுண்கள்). மேலும், வெளிநாடுகளில் வளர்ந்தாலும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழையும் தமிழ்க் கலாச்சாரங்களையும் தமிழ் பெற்றொர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். ஏனைய இந்திய வளைகுடா மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழர்க்கு தமிழ் பற்று அதிகம்தான்

2 மறுமொழிகள்:

Anonymous சொல்வது:

பாதி ஒளிப்பதிவுகளை மட்டுமே பார்க்க முடிந்தது.நேரம் இல்லை :-(
ஆனால் நான் கேட்ட அந்த அலைபாயுதே கண்ணா வயலின் இசை அருமை.

தமிழ் தமிழ்நாட்டில் வாழ்கின்றதோ இல்லையோ வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

து. சாரங்கன் / Saru சொல்வது:

நன்றி அனானி,
எனது மாமாவின் மகளுக்கு பத்து வயதுதான். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தாலும் பாட்டு மற்றும் வீணை கற்று வருகிறாள். நான் இந்தியாவில்தான் வளர்ந்தேன். நீங்கள் சொல்வதுபோல் super singer பார்க்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை computer classக்கு அனுப்புகிறார்களே தவிர சங்கீதம் கற்றுக் கொள்ள அனுப்புவதில் ஆர்வம் காட்டுவதில்லை :(

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்