சுதுர்சன ஹோமம் (குறொளி சொர்ண காமாட்சி அம்மன் கோவில்)

நேற்று (30-ஆடி-07) எங்கள் குறோளி சொர்ண காமாட்சி அம்மன் கோவிலில் விஷ்ணு திருவுருவத்தை நிறுவி சுதர்சன ஹோமத்தை நடாத்தினார்கள். இரண்டோ மூன்று வருடங்களுக்கு முன் ஒரு "Community centre"இல் ஒரு பெட்டியில் அம்மனின் படங்களை வைத்து தொடங்கிய இக்கோவில் இப்பொழுது ஒரு இடத்தை leaseஇல் எடுத்து ஊர்க்கோவில்கள் போல வளர்ந்துள்ளது. முன்பெல்லாம் கோவிலுக்கு போக வேண்டுமென்றால் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆனால் இப்பொழுது எங்களுக்கென்றே ஒரு கோவில் உள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.

சுதர்சன ஹோமத்திலிருந்து சில படங்கள்:

கோவிலில் இசைக்கப்பட்ட நாதஸ்வர மேளயிசையின் நிகழ்படம்:

ஹோமத்தின் முடிவில் நல்லூரைச் சார்ந்த பெரியவர் ஒருவர் பேசினார். நிகழ்படமாக எடுக்க எண்ணியிருந்தேன் ஆனால் எனது கமிராவின் பாட்டரி தீர்ந்துவிட்டது :-( அவர் சொன்ன, என் மனதில் நின்ற சிலவிடயங்கள்:

சுதுர்சனம் என்பது விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரமேயாகும்.... கண்ணன் என்று பெயர் வரக் காரணம், தன் ஒரு கண்ணை இழந்து சிவனே பூஜித்த சுதர்சனத்தை பெற்றதால்தான்.... நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் நாம் நலமாக இருப்பதற்கு காரணம் நாம் செய்த புண்ணியம்தான்.... இச்சுதர்சன ஹோமத்தின் மூலம் நாம் மட்டுமின்றி நமது ஊரும் நாடும் உலகமும் நல்வாழ்வு வாழ இறைவன் அருள் புரிகிறான்.... நமது கலாச்சாரத்தையும் ஒழுகத்தையும் மறக்காமல் இருக்கவும் நமது தலைமுறையினரும் அவற்றை பின்பற்றவும் உதவுவது இக்கோயில்கள்தான்.... எனவே இக்கோயில்கள் மேன்மேலும் வளர உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.... எதை எடுத்தீர்களோ அது இங்கிருந்துதான் எடுக்கப்பட்டது, எதை வைத்திருக்கிறீர்களோ அதுவும் இங்கிருந்தே எடுக்கப்பட்டது, நீங்கள் கொண்டுபோவது ஏதுமில்லை, எனவே இயன்ற அளவு கோவிலை முன்னெற்ற உதவுங்கள்.

சொல்ல மறந்திட்டேன் கோயில் சாப்பாடு - தயிர்சாதம், தோசை, புளிசாதம், சம்பல், சாம்பார், லட்டு, முறுக்கு, மைசூர் பாகு - அப்படின்னு சூப்பரோ சூப்பர். இப்பகூட லட்டையும் முறுக்கையும் கொறிச்சுகிட்டுதான் இந்த இடுகையை எழுதிக்கிட்டிருக்கேன் :-D

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்