இங்கிலாந்தில் பனி

கடந்த அரையாண்டு கல்லூரிப் படிப்பில் வேலைப் பளு ரொம்ப ஜாஸ்தி. இரவு பகல் பாராமல் வேலை செய்தும் சில பாடங்களுக்குரிய courseworkகளை உரிய நேரத்தில் கொடுக்க இயலாமல் தவித்தேன். ஒரு வழியாக இன்றுதான் முடித்த வேலைகளையெல்லாம் கொடுத்துவிட்டேன். இதோ நான் எனது பாடத்துக்காக செய்த இணையதளம்.

நேற்று அதிகாலை இங்கிலாந்தில் பல இடங்களில் பனி பெய்தது. நான் கல்லூரியில் தங்கியிருக்கும் வீட்டின் பின்புறப் புல்வெளியும் ஒரே வெள்ளையாக மாறியிருந்தது.


நான் இங்கிலாந்து வந்து ஆறு வருடங்களுக்கு மேல்லாகிறது. இவ்வளவு பனியை பார்த்தது இதுவே நாலோ ஐந்தாவது முறை. இந்தியாவில் எண்ணுவதுபோல் இங்கெல்லாம் ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் பனிபெய்வதில்லை. அப்படி பெய்தால் போதும், எல்லாருக்கும் ஒரே குஜால். உடனே பனியுருண்டை செய்து செல்லச் சண்டை போட களமிறங்கி விடுவார்கள். இல்லாவிடில், 'பனி மனிதர்' ஒன்றை உருவாக்கி, அலங்கரித்து, பெயர் வைத்து விடுவார்கள். நாமக்கெல்லாம் இதல்லாம் ஒத்து வராது. அதான் படமெடுத்து ஒரு பதிப்பெழுதி முடித்துக் கொண்டேன் :)

மழை: போக்கிரி - தமிழ் சினிமாவின் சாபக்கேடு!

மழை: போக்கிரி - தமிழ் சினிமாவின் சாபக்கேடு!

விஜய் படங்கள் பார்பதை நிறுத்தி ரொம்பா நாள் ஆச்சு. போக்கிரி பார்க்கலாம் என்று இருந்தேன், நல்லவேளை பிழைத்துக் கொண்டேன்.

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்