பாரிசும் யாழும்

நான் கடந்த நர்தார் விடுமுறையின்போது பாரிஸுக்குச் சென்றிருந்தேன். அங்கு sacre coeur/sacred heart எனும் தேவாலயம் உள்ளது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் மோன்மார்ட்ரெ(Monmartre) மலையின் மீது கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் வெளியேயும் உள்ளேயும் வேலைப்பாடுகள் பிரமாதம். மாமல்லபுரம் அளவுக்கு இல்லாட்டிலும், சிற்ப வேலைப்பாடுகள் எல்லாம் அழகாகவே இருந்தது.

ஆலயத்தினுள், புகைப்படமெடுக்க முடியவில்லை. உள்ளே, ஒலிபெருக்கிகளில் தவழ்ந்துவரும் தியான ஒலியைக் கேட்டவுடன் மனதினில் ஒரு அமைதி. ஆலயத்தை சுற்றி வருகையில் ஓரிடத்தில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. அதனருகே, ஆலயத்தின் மின்சார மற்றும் தண்ணீர் செலவுகளுக்கு பக்தர்கள் காணிக்கையளித்து உதவுமாறு வேண்டி பல மொழிகளில் எழுதியிருந்தனர். தமிழிலிலும் எழுதியிருந்தார்கள். சாதராணமா ஒன்னோ இல்ல ரெண்டொ யுரொ மட்டும் போட்டிருப்பபேன். தமிழ்ல எழுதினதால 10 யுரொ போட்டேன்.

ஆலயத்தின் வெளிப் படிக்கட்டுகளில் பலர் அவர்களின் திறமையைக் காட்டி தானமீட்டிக் கொண்டிருந்தனர். அதில் ஒருத்தர் அழகாக யாழை மீட்டிக் கொண்டிருந்தார். அதைக் கீழே காணலாம்



மேலும் இவ்வாலயத்தைச் சுற்றிலும் இயற்கைக் காட்சிகள் எராளம். அதை இன்னொரு பதிவில் ஏற்றுகிறேன்.

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்